LORD SRI KRISHNA - கண்ணா, கார்மேகவண்ணா
FROM SAMPATH’S DESK: கண்ணா , கார்மேகவண்ணா கண்ணா , நீ அவதரித்த இடம் ஒரு சிறைச்சாலை ; வளர்ந்த கோகுலம் ஆனது பூஞ்சோலை ; மேகவண்ணா , நீ சென்ற இடமெல்லாம் மாறியது பசி தீர்க்கும் பழச்சோலை ; ஆண்ட துவாரகை மக்களுக்கான மகிழ்சிச்சாலை ! வாய் திறந்து உலகைக் காட்டிய மாயம் அதிசய மயம் ; இந்திரன் கோபத்தால் பெய்த பெரு மழையிலிருந்து கோகுல மக்களை காக்க , கோவர்த்தனகிரியை தன் சுண்டு விரலால் குடையாகப் பிடித்தது ஆச்சரியம் ; நின் குழந்தைப்பருவ விளையாடல்களும் , லீலைகளும் , அற்புதங்களும் தெய்வசக்தியின் பரிமாணம் ; அழிக்க வந்த தீய சக்திகளை மாய்த்த விதம் பிரம்மாண்டம் ! நீலவண்ணா , நின் புல்லாங்குழல் இசையால் அனைவரையும் மயக்கினாய் ; நச்சுக்கள்வன் காளியனின் தலைமீது நர்த்தனமாடி அடக்கினாய் ; அநீதி அக்கிரமங்களை எதிர்த்து , பஞ்ச பாண்டவர்களுக்கு தோள் கொடுத்தாய் ; ...