VALLALAR
திருஅருட்பிரகாச வள்ளலார் (5.10.1823-30.1.1874)
(அருட்ப்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை)
ஜோதி வழி இறைவழிபாடு கண்டு மகிழ்ந்தவரே;
‘சமரச சுத்த சன்மார்க்கம்’ கண்டவரே;
அன்புவழி அருட்களஞ்சியம். திருவருட்பாவை அளித்தவரே;
ஆன்ம நேயஒருமைப்பாட்டை போதித்து வளர்த்தவரே!
சித்தர் திருமூல நாயனாரின் அவதாரம் என போற்றப்படுபவரே;
மூர்க்கப் பசிப்பிணியை போக்க அணையாத்தீயை மூட்டியவரே;
அறியாமை அகல ஆன்மீகத்தீயையும் மக்களிடம் உருவாக்கியவரே:
சமூகச் சமநிலை காண அருள்மொழி வழங்கியவரே!
ஜீவகாருண்ய ஒழுக்கத்தை பரப்பிய சிகரமே, சத்ய தர்ம சீலரே;
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என பகர்ந்தவரே:
ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என வாழ்ந்து காட்டியவரே;
ஜோதி வடிவாக இறைவனோடு கலந்தவரே!
(ரா. சம்பத்)
6/10/2020

Comments
Post a Comment