THIRUVALLUVAR
தெய்வப்புலவர்
திருவள்ளுவர்
வாமனனோ இவ்வுலகை அளந்ததது
மூவடியில்;
தாங்களோ
அதைச்செய்தது ஈரடியில்!
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை;
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்;
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்!
மானுடம் உய்யுற நீவிர்
கண்டது ‘திருக்குறள்’ எனும் பாவாரம்;
உலகப்பொதுமறை மற்றும்
வாழ்வியல் தத்துவங்களின் சாரம்;
அறம், பொருள் மற்றும்
இன்பத்தின் சாராம்சம்;
என்ன வைத்தீர்கள் நீங்கள்
மீதம்.
திருக்குறளின் மறு பெயர்கள் - முப்பால், உத்தரவேதம், தெய்வநூல்,
பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை;
பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நின் வேதம் வாழ்வியலின்
உயிரோவியம்;
வாழ்வு நீரோட்டத்தின் மதிப்பற்ற உன்னத காவியம்;
‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு’
யார் படைக்ககூடும் இந்தச் சிற்றுரை போலிருக்கும் மிகப்பேருரை;
தேவையில்லை இதற்கு ஒரு பொழிப்புரை;
குறளே ஒரு மாபெரும் பொருளுரை;
இம்மைக்கும்
மறுமைக்கும் அருளுரை!
அறிந்த சிற்றமிழில் செய்தேன் என்னாலான இந்த புகழோவியம்.
வாழும்
நிந்தன் திருக்குறளும் நின் புகழும் - இந்த வையம் உள்ள வரை!
(ரா.சம்பத்)
11/8/2020
Comments
Post a Comment