KANNADASAN
From Sampath’s Desk:
கவியரசு கண்ணதாசன்
(24 ஜூன் 1927 – 17 அக்டோபர் 1981)
கவியரசு
கண்ணதாசனின் தமிழ்க்கவி ஆளுமை;
அவர் தம்
நளின அறிவுசார் சொல்லாண்மை;
எளிமையும்
இனிமையும் கலந்த சொல் வன்மை;
அவை கண்டு
வியந்ததே இப்புவி அது உண்மை!
தெளிந்த
நீரோடை போல் நின் கவிநடை;
உன்னிடத்தில்
இருந்த சொற்ப்படை;
நீவிர்
தமிழுலகத்திற்களித்திட்டக் கவிக்கொடை;
இடுக்கண்
மழைக்கு ஒரு குடை!
காதல்,
இன்பம், துன்பம், தத்துவம் தோய்ந்த நின் பாடல்கள்;
நீவிர் செய்த கவித்திருவிளையாடல்கள்;
கண்டு
மயங்கினோமே நாங்கள்;
நன்றி
சொல்ல எங்களுக்கில்லை சொற்க்கள்!
அனுபவம்
மிளிரும் நின் கருத்துக்கள்;
அவைகளை
நீர் அளித்த பாங்குகள்;
என்றும்
ஒயாத கடல் அலைகள்;
இன்றுவரை
நிமிர்ந்து நிற்கும் பாமலைகள்!
ஆன்மீக
உலகுக்கு பல பாக்கள் அருளிச்செய்தாய்;
பா ரதத்தில்
இப்பூவுலகில் பவனி வந்தாய்;
இவ்வவனியில்
கவிமழை பொழிந்தாய்;
பல சொல்நயங்கள்
காண்பித்து சிறந்தாய்!
இறை இசைவின்றி
ஓர் அசைவும் இல்லையென உணர்ந்தாய்;
அவனை கொண்டாட
பலப்பாடல்கள் படைத்து மகிழ்ந்தாய்;
அர்த்தமுள்ள
இந்து மதம் என போற்றினாய்;
இறையன்பை
உயிர் மூச்சாய் கொண்டாடினாய்;
கிருஷ்ணகானம்
பாடி நீங்காப்புகழுடன் இவ்வுலகிலிருந்து நீங்கினாய்!
நின் புகழ்
வாழிய வாழியவே!
(ரா.சம்பத்)
20/10/2021
கவியரசர் கண்ணதாசன் பற்றிய அருமையான கவிதை . நான் போற்றும் ஓர் உன்னத கவிஞர்
ReplyDeleteஆஹா அருமை. இன்னொரு தமிழ் கவிஞர் பிறந்து விட்டார். இன்னும் தமிழில் நிறைய எழுதுங்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சி. 👏👏👏👏👍👍👍👍👌👌👌👌🌹💐🙏💐🌹💐
ReplyDeleteஜெயந்தி ரமணி