சுதந்திரம் – INDEPENDENCE / FREEDOM – स्वतंत्रता / आज़ादी
FROM SAMPATH’S DESK:
சுதந்திரம் – INDEPENDENCE / FREEDOM
स्वतंत्रता / आज़ादी
15 August / 15 ஆகஸ்ட்
சும்மாவா வந்தது சுதந்திரம்;
அர்பணிப்பு, உயிர்த்தியாகம் அதுதான் வீரம்,;
‘வந்தே மாதரம்' என்பதே தாரக மந்திரம்;
வேறேதுமில்லை அன்றைய நிலவரம்!
சுதந்திரப் போராட்டத்தில், பலருக்கு சிறையே வீடு;
அவர்கள் பட்ட சொல்லொணா பெரும்பாடு;
தன் வாழ்க்கையையே இழந்தவர்களுக்கு ஏது இணை, ஈடு;
இவை ஏதோ புனையப்பட்ட கதை அல்ல, உண்மையின் வெளிப்பாடு!
இக்கால இளைஞர்களே, இதை உணருங்கள்;
அடக்குமுறை, கொடுமைகளை சகித்தவர்களை போற்றுங்கள்;
எவ்வளவு விலை கொடுத்து விடுதலை பெற்றோம் என சிந்தியுங்ககள்;
பாரத தேசத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என பெருமைபடுங்கள்!
வேற்றுமையில் ஓற்றுமை நம் சிறப்பு;
நமது வேறுபாடுகளே நம்முடைய பலம், குவிவு;
இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனைத்தையும் ஈன்ற அனைவரின்
புகழை போற்றுங்கள்;
இந்தியாவே நமது முன்னுரிமையென நினையுங்கள்;
இன்று நாம் பெற்றிருக்கும் பெரும் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அவர்கள் தான் என்பதை மறவாதீர்கள்;
அன்று, இளைஞர்களை பாரதம் அழைத்தது விடுதலை வேள்விக்கு; இன்றோ, இந்தியாவை உலக அரங்கில் வளர்ச்சியின் உச்சியில் வைக்க அழைக்கிறது, உழையுங்கள்;
இந்தியர் அனைவரும் எல்லாம் பெற விழையுங்கள்; சேவை செய்யுங்கள்;
என்றும், விடுதலை வேள்வியில் வியர்வை, இரத்தம் சிந்திய தியாகிகளின் நாட்டுப்பற்றை நினைவில் போற்றி அரும்பணி ஆற்றுங்கள்;
இன்று உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமான இந்தியாவை மூன்றாம் பெரியதாக்க
அனைவரும் பாடுபடுவோம்.
தேசத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளை முறியடிப்போம்!
வந்தே மாதரம் – வெல்க பாரதம் – Jai Hind!
ரா.சம்பத்
20.8.2025
Comments
Post a Comment