LORD SRI KRISHNA - கண்ணா, கார்மேகவண்ணா

FROM SAMPATH’S DESK:

 

 



கண்ணா, கார்மேகவண்ணா 

 

  

கண்ணா, நீ அவதரித்த இடம் ஒரு சிறைச்சாலை;

 

வளர்ந்த கோகுலம் ஆனது பூஞ்சோலை;

 

மேகவண்ணா, நீ சென்ற இடமெல்லாம் மாறியது பசி தீர்க்கும் பழச்சோலை;

 

ஆண்ட துவாரகை மக்களுக்கான மகிழ்சிச்சாலை!

 

 

 

வாய் திறந்து உலகைக் காட்டிய மாயம் அதிசய மயம்;

 

இந்திரன் கோபத்தால் பெய்த பெரு மழையிலிருந்து கோகுல மக்களை காக்க, கோவர்த்தனகிரியை தன் சுண்டு விரலால் குடையாகப் பிடித்தது ஆச்சரியம்;

 

நின் குழந்தைப்பருவ விளையாடல்களும், லீலைகளும், அற்புதங்களும் தெய்வசக்தியின் பரிமாணம்;

 

அழிக்க வந்த தீய சக்திகளை மாய்த்த விதம் பிரம்மாண்டம்! 

 

 

 

நீலவண்ணா, நின் புல்லாங்குழல் இசையால் அனைவரையும் மயக்கினாய்;

 

நச்சுக்கள்வன் காளியனின் தலைமீது நர்த்தனமாடி அடக்கினாய்;

 

அநீதி அக்கிரமங்களை எதிர்த்து, பஞ்ச பாண்டவர்களுக்கு தோள் கொடுத்தாய்;

 

மகாபாரதப்போர் முனையில் அர்ஜுனனுக்குத் தர்மத்தை போதித்து, பகவத் கீதையை உபதேசித்தாய்;

 

அது இன்றுவரை நீதி போதனைகளாய் இவ்வுலக மக்களுக்கு திகழ்கிறது ஒரு வழிகாட்டியாய்;

 

பார்த்தனுக்கு தேர் ஓட்டி 'பார்த்தசாரதி' ஆனாய், பாரதப்போரை வெல்ல உதவினாய்;

 

கம்சனை மதுரா நகருக்குச் சென்று வதம் செய்து, பெற்றோர்தேவகி, வசுதேவரை - சிறையிலிருந்து மீட்டாய்!

 

 

 

நின் பாதங்கள் சரணம்!

 

ரா. சம்பத்

25.4.2026

Comments

Popular posts from this blog

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

TONGUE-TWISTER - LITY and RITY Galore