எல்லாம் வல்ல இறைவன் - THE LORD ALMIGHTY

 

FROM SAMPATH’S DESK:

 




எல்லாம் வல்ல இறைவன்

THE LORD ALMIGHTY

 

 

கடவுளே, நின் படைப்புகள் எண்ணிலடங்கா;

 

காணுமிடமெங்கும், நின் கைவண்ணத்தின் அழகு வர்ணனையிலடங்கா;

 

மனிதப்படைப்பு மாமகுடம், சிறப்பு சொல்லிலடங்கா;

 

அனைத்து உயிர்களின் பாதுகாப்புக் காவலன் நீ, நின் கருணை அளப்பிலடங்கா!

 

 

 

எல்லாப் படைப்புக்களின் மூலம் நீக்கமற நிறைந்திருக்கிறாய்;

 

ஒவ்வொருவருக்கும் பொறுப்பு வைத்திருக்கிறாய்;

 

எல்லோரும் நல்வாழ்வு வாழ வழிவகைகள் வகுத்திருக்கிறாய்;

 

நல்லவர்களுக்கும், பக்தர்களுக்கும் துணை நிற்கிறாய்!

 

 

 

ஆண்டவனே, நீ அழகே உருவானவன் தானே?

 

உருவ வழிபாடு, உன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கத்தானே;

 

பகுத்தறியும் மனங்களுக்கு அதிக விளக்கம் தேவையில்லைதானே;

 

அனைவருள்ளும் நீ அடக்கம் தானே;

 

உணர்ந்த உள்ளங்களுக்கு பாடம் புகட்ட அவசியமில்லைதானே!

 

 

 

ரா. சம்பத்

3/5/2026

Comments

Popular posts from this blog

FEATHERS OF POSITIVE PHILOSOPHY!

THIRUMURUGA KRIPANANDA VARIYAR - திருமுருக கிருபானந்த வாரியார்

TONGUE-TWISTER - LITY and RITY Galore