இயற்கை (NATURE)
FROM SAMPATH’S DESK:
இயற்கை (NATURE)
இயற்கையை ரசிப்பவன் ஆக மாட்டான் தனிமை:
ஏனெனில், அதில் ஒரு திகட்டா இனிமை;
அழகின் அற்புதத் தன்மை;
சலிப்பில்லா மகிமை!
அனைவரையும் கவரும் வானம்;
அதன் வர்ணஜாலம்;
அது வழங்கும் மழையும்,
இயற்கையின் வரப்பிரசாதம்,
நம்மை சுற்றி ஒலிக்கும் ஓசைகள் அற்புத கானம்;
அதில் பலப்பல ராகம்;
கண் கவர் காட்சிகள் இதயத்தை வருடும்;
எல்லாம் மனநலத்தைப் பேணும்!
அலர்கதிர் ஞாயிறு, நிலவு, விண்மீன்கள் மற்றும் -
மலைகள், நதிகள், நீர்வீழ்ச்சிகள், நீண்ட நெடிய கடல்கள், வழங்கும் தோற்றம்;
இன்னும் பல எண்ணிலடங்கா நில, நீர்வாழ் உயிரினங்கள்,
அனைத்தும் நமக்குத் தரும் நல்ல வாழ்க்கை மாற்றம், முன்னேற்றம்;
இவையெல்லாம் நமக்கு ஏற்றம்!
ரா.சம்பத்
R.SAMPATH
25.7.2026
Comments
Post a Comment